உள்ளூர் செய்திகள்
.

பட்டதாரி மாணவி மாயம்

Published On 2022-01-22 06:49 GMT   |   Update On 2022-01-22 06:49 GMT
மத்தூர் அருகே கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மாணவி மாயமானார்.
மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள அத்திப் பள்ளம் பகுதியை சேர்ந்தவர் செங்டுட்டுவன். இவரது மகள் ஜெய்சூரியா (வயது23). இவர் எம்.காம் வரை படித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார்.

இவர் நேற்று முன்தினம் கடைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.இதனால் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 

இது குறித்து மாணவியின் தந்தை செங்குட்டுவன் மத்தூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவி ஜெய்சூரியாவை தேடி வருகின்றார்.
Tags:    

Similar News