உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

வீட்டில் காசு வைத்து சூதாடிய 6 பேர் கைது

Published On 2022-01-22 11:51 IST   |   Update On 2022-01-22 11:51:00 IST
புதுவையில் வீட்டில் காசு வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ-.25 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுச்சேரி:

புதுவை செயிண்ட் தெரேசா வீதியில் ஒரு வீட்டில் கும்பல் காசு வைத்து சூதாடுவதாக பெரியகடை போலீசாருக்கு ரககிய தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் மற்றும் போலீசார் அந்த வீட்டில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் வீட்டில் சூதாடிக்கொண்டிருந்தனர்.

இதையடுத்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த ராஜா என்ற பழனி(49), ரங்கப்பிள்ளை வீதியை சேர்ந்த ரமேஷ்(42), கோவிந்த சாலை புதுநகரை சேர்ந்த கோபி(38), நயினார்மண்டபம் நாகம்மாள் நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன்(45), திருச் சிற்றம்பலம் கூட்டுரோட்டை சேர்ந்த ரவி(51) மற்றும் நயினார்மண்டபம் மூகாம்பிகை நகரை சேர்ந்த ஆறுமுகம்(43) என்பது தெரியவந்தது.

இதைதொடர்ந்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள் சூதாட்ட பணம் ரூ.25 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் வில்லியனூர் அருகே அகரம் அய்யனார் கோவில் அருகே 3 பேர் காசு வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர் அவர்களை வில்லியனூர் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த பிரபா(37), ஏழுமலை(47), முத்தமிழ்(37) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள் மற்றும் சூதாட்ட பணம் ரூ-730 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Similar News