உள்ளூர் செய்திகள்
மதுராந்தகம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
மதுராந்தகம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுராந்தகம்:
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த சோத்துப்பாக்கத்தை சேர்ந்தவர் வேலு இவரது மகன் அன்பழகன் (வயது 22). இவர் மோட்டார் சைக்கிளில் சோத்துப்பாக்கத்தில் இருந்து மதுராந்தகம் நோக்கி சென்றார்.ஒழுப்பாக்கம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவ்வாறு செல்லும் வழியில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இது குறித்து அவரது அண்ணன் சதீஷ் மதுராந்தகம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை பிடித்து விசாரித்து வருகிறார்.