உள்ளூர் செய்திகள்
மயிலாடுதுறை நகராட்சியை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் இந்திய விளையாட்டு ஆணையம் மைதானம் முன்பு தருமபுரம் சாலையில் பாதாள சாக்கடை கழிவுநீர் தேங்கி அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.
இதனை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு வீதிகளில் வழிந்தோடும் பாதாள சாக்கடை கழிவு நீரை அகற்ற தற்காலிக நடவடிக்கை கூட எடுக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும்
3 ஆண்டுகளாக சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வரும் பாதாள சாக்கடை குழாய் அடைப்புகளை சரி செய்து நடவடிக்கை எடுக்கக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மாநில துணை தலைவர் அய்யாசாமி, நகர செயலாளர் கமல்ராஜா, வன்னியர் சங்க துணைத் தலைவர் சக்திவேல், பூம்புகார் தொகுதி அமைப்பு செயலாளர் தமிழ்துரை, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் காமராஜ், ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.