உள்ளூர் செய்திகள்
.

வேலைக்கு சென்ற 2 பெண்கள் திடீர் மாயம்

Published On 2022-01-21 08:09 GMT   |   Update On 2022-01-21 08:09 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியில் வேலைக்கு சென்ற 2 பெண்கள் மாயமாகி உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகள் சங்கவி (வயது 19). இவர் 10-ம் வகுப்பு வரை படித்து அப்பகுதியில் உள்ள பேன்சி கடையில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற சங்கவி, அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிவக்குமார், உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தார். ஆனால் காணவில்லை.

இதுபற்றி மத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி றார்கள்.

இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி அடுத்த காவாப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரசாந்த், விவசாயி. இவரது மனைவி அமிர்தவள்ளி (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. கவுசல்யா என்ற 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் அமிர்தவள்ளி, போச்சம்பள்ளியில் உள்ள ஒரு தனியார் ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கடந்த 10 மாதமாக அங்கு வேலை பார்த்து வருகிறார். இதற்கிடையே கடந்த 17-ந் தேதி அமிர்தவள்ளிவேலைக்கு சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் அவரது கணவர் பிரசாந்த், பல இடங்களில் மனைவியை தேடி பார்த்தார். ஆனால் காணவில்லை. இதுபற்றி அவர் நாகரசம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News