உள்ளூர் செய்திகள்
குடிநீர் வசதியை அசோக்பாபு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

பொதுமக்கள்-நோயாளிகள் பயன்பாட்டிற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி: அசோக்பாபு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Published On 2022-01-21 07:41 GMT   |   Update On 2022-01-21 07:41 GMT
முதலியார்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்கள்-நோயாளிகள் பயன்பாட்டிற்கு அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியை அசோக்பாபு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:

முதலியார்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் குடிநீர் பயன்பாட்டிற்காக முதலியார்பேட்டையை சேர்ந்த பா.ஜனதா பிரமுகர் எஸ்.பி.குமார் தனது சொந்த செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். இதனை அசோக்பாபு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பாலாஜி மற்றும் செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள் பங்கேற்றனர். 

மேலும் இவ்விழாவில் மாநில பா.ஜனதா துணைத்தலைவர் செல்வம், தொகுதி தலைவர் இன்பசேகர், பா.ஜனதா பிரமுகர்கள்  பன்னீர்செல்வம், வெங்கடேசன், அய்யனாரப்பன், விஜயரங்கம், கமலக்கண்ணன், விஜயகுமார், கனகராஜ், வெற்றி செல்வன், பழனிவேலு, பச்சையப்பன், புவனேஸ்வரி, கார்த்திகேயன், பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தற்போது அமைக்கப் பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியால் தினமும் 500&க்கும் மேற்பட்ட பொதுமக்கள்-நோயாளிகள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடதக்கது.
Tags:    

Similar News