உள்ளூர் செய்திகள்
ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு நாட்டிய பயிற்சி
புதுவை டி.என்.பாளையத்தில் ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு நாட்டிய பயிற்சி அளிக்கப்பட்டது.
புதுச்சேரி:
தவளக்குப்பம் அடுத்த டி.என்.பாளையத்தில் அமைந்துள்ள உதவி கரங்கள் ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு நாட்டியப் பயிற்சி பட்டறை, சமூக நல தொடர் கல்வி இயக்க வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பரத நாட்டிய கலைஞர் டாக்டர் கிருத்திகா ரவிச்சந்திரன் தலைமை தாங்கி நாட்டியம் குறித்த பல்வேறு தகவல்களை குழந்தைகளுக்கு வழங்கி நாட்டிய பயிற்சியும் அளித் தார்.
நிகழ்ச்சியில் 80-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் பங்கு கொண்டு பயன் பெற்றனர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அறக்கட்டளையின் சார்பாக நாட்டியப் பயிற்சி பெற்று வரும் குழந்தைகளின் நாட்டியமும் நடந்தது.