உள்ளூர் செய்திகள்
.

குற்றவாளிகள் 2 பேர் நீதிபதி முன்னிலையில் சரண்

Published On 2022-01-20 11:07 GMT   |   Update On 2022-01-20 11:07 GMT
ஓசூரில் தலைமறைவாக இருந்த 2 குற்றவாளிகள் நீதிபதி முன்னிலையில் சரண் அடைந்தனர்.
ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்திற் குட்பட்ட பகுதியில் கடந்த 2013-ஆம் ஆண்டு கொள்ளை மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக 8 பேர் மீது வழக்குபதிவு செய்யப் பட்டது. 

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் கோணிக்கரையை சேர்ந்த பாபு (33) மற்றும் கிருஷ்ணகிரியை சேர்ந்த தியாகு (44) ஆகிய 2 பேருக்கும் கடந்த 2019- ஆம் ஆண்டு ஓசூர் சப் கோர்ட்டில் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதிக் கப்பட்டது. 

இந்த தீர்ப்பை எதிர்த்து ஓசூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோதிலும், கடந்த 27-07-&2021 அன்று மேற்கண்ட தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த குற்றவாளிகள் இருவரும் தலைமறை வாகிவிட்டனர்.

இந்த நிலையில் குற்றவாளிகள் பாபு மற்றும் தியாகு ஆகிய இருவரும் நேற்று ஓசூர் கூடுதல் மாவட்ட நீதிபதி ரோசலின் துரை முன்னிலையில் சரணடைந்தனர்.
Tags:    

Similar News