உள்ளூர் செய்திகள்
.

குற்றவாளிகள் 2 பேர் நீதிபதி முன்னிலையில் சரண்

Published On 2022-01-20 16:37 IST   |   Update On 2022-01-20 16:37:00 IST
ஓசூரில் தலைமறைவாக இருந்த 2 குற்றவாளிகள் நீதிபதி முன்னிலையில் சரண் அடைந்தனர்.
ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்திற் குட்பட்ட பகுதியில் கடந்த 2013-ஆம் ஆண்டு கொள்ளை மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக 8 பேர் மீது வழக்குபதிவு செய்யப் பட்டது. 

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் கோணிக்கரையை சேர்ந்த பாபு (33) மற்றும் கிருஷ்ணகிரியை சேர்ந்த தியாகு (44) ஆகிய 2 பேருக்கும் கடந்த 2019- ஆம் ஆண்டு ஓசூர் சப் கோர்ட்டில் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதிக் கப்பட்டது. 

இந்த தீர்ப்பை எதிர்த்து ஓசூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோதிலும், கடந்த 27-07-&2021 அன்று மேற்கண்ட தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த குற்றவாளிகள் இருவரும் தலைமறை வாகிவிட்டனர்.

இந்த நிலையில் குற்றவாளிகள் பாபு மற்றும் தியாகு ஆகிய இருவரும் நேற்று ஓசூர் கூடுதல் மாவட்ட நீதிபதி ரோசலின் துரை முன்னிலையில் சரணடைந்தனர்.

Similar News