உள்ளூர் செய்திகள்
அனுமதியின்றி எருது விழா நடத்திய 853 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதியின்றி எருதுவிடும் விழா மற்றும் ஸ்பீக்கர்கள் கட்டி விழா நடத்திய 853 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:
.கிருஷ்ணகிரி கே.கே.நகர் தர்கா பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது33), சூளகிரி கவுனிகோட்டா பகுதியை சேர்ந்த மூர்த்தி(40) மற்றும் 749 பேர், அஞ்செட்டி தொட்டமஞ்சு பகுதியை சேர்ந்த கமலா (45) மற்றும் 49 பேர், சிங்காரப்பேட்டை பெரியதள்ளப்பாடி பகுதியை சேர்ந்த ரஜினி (40), மற்றும்24 பேர், மிட்டப்பள்ளி தங்கவேல் மற்றும், 14பேர் உட்பட, 853 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.