உள்ளூர் செய்திகள்
பயிற்சி கூட்டம்.

ஊராட்சி தலைவர்களுக்கு பஞ்சாயத்து அடிப்படை வளர்ச்சி குறித்து பயிற்சி

Published On 2022-01-20 09:42 GMT   |   Update On 2022-01-20 09:42 GMT
செம்பனார்கோவில் 54 ஊராட்சி தலைவர்களுக்கு பஞ்சாயத்து அடிப்படை வளர்ச்சி குறித்து பயிற்சி நடைபெற்றது
தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம், 54 ஊராட்சி தலைவர்களுக்கு பஞ்சாயத்து அடிப்படை வளர்ச்சி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. 

பயிற்சிக்கு உதவி இயக்குனர் மனோகரன் தலைமை தாங்கினார். 

ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தனர். கிராம ஊராட்சியின் கடமைகள் அதிகாரங்கள் பொறுப்புகள், ஊராட்சி கணக்குகள் பராமரிப்பு. மத்திய மாநில அரசு திட்டங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பருவகால மாற்றம், 

பேரிடர் மேலாண்மை, ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், 
நிதி நிர்வாகம், மூன்று அடுக்கு ஊராட்சிகளின் அமைப்பு, தமிழ்நாடு 
அரசு ஊரக சட்டம், உள்ளிட்ட பஞ்சாயத்து சட்டதிட்டங்கள் உட்பட்டு 
செயல்பட ஊராட்சித் தலைவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜனகர், நல்லமுத்து, மைவிழி, மகேஸ்வரி, மற்றும் ஊராட்சி தலைவர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News