உள்ளூர் செய்திகள்
கும்பாபிஷேக பத்திரிக்கை வழங்கல்

ஆதீனங்களுக்கு கும்பாபிஷேக விழா பத்திரிக்கை வழங்கல்

Published On 2022-01-20 09:07 GMT   |   Update On 2022-01-20 09:07 GMT
தருமை ஆதீன கோவில்களில் கும்பாபிஷேக விழாவையொட்டி சூரியனார்கோவில், வேளாக்குறிச்சி ஆதீனங்களுக்கு பத்திரிக்கை வழங்கப்பட்டது.
சீர்காழி:

திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி 
தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உத்தரவின்படி 
தருமையாதீன தென்மண்டல கட்டளை விசாரணை ஸ்ரீமத் திருஞானசம்பந்ததம்பிரான் சுவாமிகள், சூரியனார் கோயில் 
ஆதீனம் சென்று குருமுதல்வர் சிவக்கிர யோகிகள் தரிசனம் செய்தார். 

பின்னர் 28-வது ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்திடம், தருமையாதீன திருநன்றியூர் தேவஸ்தானம் மற்றும் தென்திருமுல்லைவாயில் 
கோவில்களின் மகா கும்பாபிஷேக பத்திரிக் கைகளை வழங்கினார்.

திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம்  குருமகாசந்நிதானம் அவர்களிடத்தில் திருக்கயிலாய பம்பரை தருமை ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் அவர்களின் அருளாணையின் வண்ணம் ஸ்ரீமத் சொக்கலிங்கத் தம்பிரான் சுவாமிகள் திருநன்றியூர் தேவஸ்தானம் மற்றும் தென் திருமுல்லைவாயில் கோவில்களின் மகா கும்பாபிஷேக பத்திரிகை பார்க்கப்பட்டது.

இதேபோல் திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம்  
குருமகா சந்நிதானத்திடம், திருக்கயிலாய பம்பரை தருமை ஆதீனம் 
27-வது குருமகாசந்நிதானம் அருளாணையின்படி, சீர்காழி சட்டைநாத தேவஸ்தானம் கட்டளை விசாரணை ஸ்ரீமத் சொக்கலிங்கத் தம்பிரான் சுவாமிகள் திருநன்றியூர் தேவஸ்தானம் மற்றும் தென் திருமுல்லைவாயில் கோவில்களின் மகா கும்பாபிஷேக பத்திரிகைகளை வழங்கினார்.
Tags:    

Similar News