உள்ளூர் செய்திகள்
விபத்து

சிதம்பரத்தில் அரசு பஸ் மோதி அச்சக உரிமையாளர் மரணம்

Published On 2022-01-19 11:33 GMT   |   Update On 2022-01-19 11:33 GMT
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அரசு பஸ் மோதியதில் அச்சக உரிமையாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சிதம்பரம்:

சிதம்பரம் மாரியப்பா நகரைச் சேர்ந்தவர் சுந்தரேசன். இவரது மகன் பாண்டியன் (வயது 61). இவர் சொந்தமாக அச்சகம் ஒன்றை நடத்தி வந்தார்.

சம்பவத்தன்று பாண்டியன் சிதம்பரம் வடக்கு மெயின் ரோடு பகுதியில் உள்ள மீன் மார்க்கெட் எதிரில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த அரசு பஸ் பாண்டியனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பாண்டியின் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது பஸ்சின் பின் சக்கரம் பாண்டியன் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த பாண்டியன் அண்ணாமலை பல்கலைக்கழக அச்சகத்தில் பைண்டராக பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
Tags:    

Similar News