உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

அமிர்தி பூங்கா ஊழியர்கள் 17 பேருக்கு கொரோனா

Published On 2022-01-19 15:35 IST   |   Update On 2022-01-19 15:35:00 IST
அமிர்தி பூங்கா ஊழியர்கள் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளளது.
வேலூர்:

அமிர்தி பூங்கா பணியாளர்கள் அனைவருக்கும் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 

அவர்களுக்கு தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். 
இவர்கள் மூலம் விலங்குகளுக்கு பரவாமல் இருக்க பூங்கா மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News