உள்ளூர் செய்திகள்
பிரதமருக்கு தபால் அனுப்பும் போராட்டம்
புதுவை சிந்தனையாளர்கள் பேரவை சார்பில் தபால் அனுப்பும் போராட்டம் நடந்தது.
புதுச்சேரி:
புதுவை சிந்தனையாளர்கள் பேரவை சார்பில் பிரதமர் மோடிக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு பேரவை தலைவர் புதுவை கோ.செல்வம் தலைமை வகித்தார். இணை செயலர் சண்முககார்த்திக், துணைத் தலைவர்கள் கவுசல்யாதேவி, ஜெகதீசன், பொருளாளர் சரஸ்வதி, விசாலாட்சி, பைரவி, மணிமேகலை, ராஜாராம், செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
டெல்லியில் குடியரசு தினவிழாவில் தமிழக விடுதலை வீரர்கள் பட அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதை கண்டித்து கண்டன அஞ்சல் அட்டைகளை நிர்வாகிகள் அனுப்பினர்.
இதில் மக்கள் வாழ்வுரிமை இயக்கம் ஜெகநாதன், தமிழர்களம் அழகர், கலாச்சார புரட்சி இயக்கம் பிராங்க்ளின் பிரான்சுவா, இலக்கிய மறுமலர்ச்சி பேரவை அமுதவேந்தன், மற்றும் பல்வேறு சமூக அமைப்பு பிரதிநிதிகள் சரவணன், சுகுமார், வீரசேகரன், ரகுபதி, சசிக்குமார், தமிழ் முத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.