உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ரெயிலில் அடிப்பட்டு என்ஜினீயர் சாவு

Published On 2022-01-18 15:43 IST   |   Update On 2022-01-18 15:43:00 IST
மயிலாடுதுறையில் ரெயிலில் அடிப்பட்டு என்ஜினீயர் இறந்தார்.
தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாப்படுகை ரெயில்வே கேட் பகுதி சாந்துகாப்பு 
தெருவை சேர்ந்தவர் சிவா (வயது 27). என்ஜினீயரான இவர் 
சென்னையில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை 
பார்த்து வந்தார்.

கடந்த ஆண்டு கொரோனா பரவலால் சென்னையில் இருந்து 
சொந்த ஊருக்கு திரும்பினார். அதன்பின் சென்னைக்கு செல்லவில்லை.

இந்த நிலையில் அவர் மாப்படுகை ரெயில்வே கேட் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் கால் வைத்தப்படி மயங்கி கிடந்துள்ளார்.

அப்போது மயிலாடுதுறை நோக்கி வந்த ரெயில் ஒன்றின் சக்கரத்தில் 
சிக்கி சிவாவின் கால்கள் சிதைந்தன.

அக்கம் பக்கத்தினர் மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு 
கொண்டு சென்றனர். மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு 
மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 
அங்கு சிகிச்சை பலனின்றி சிவா இறந்தார்.

இது குறித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவா, எதன் காரணமாக தண்டவாளத்தில் 
மயங்கி கிடந்தார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் 
விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News