உள்ளூர் செய்திகள்
சேத்துப்பட்டு அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள ஊத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 30) இவருக்கு திருமணமாகி 1 மகன், 1 மகள் உள்ளனர்.
ராஜசேகருக்கு உடல்நல குறைவால் அவதி பட்டு வந்தார். சிகிச்சை அளித்தும் சரியாகாததால் மனஉளைச்சலில் கானப்பட்டார். இவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார்.
ராஜசேகரனை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜசேகர் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராஜசேகரின் அண்ணன் மதியழகன் சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் வரதராஜ் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.