உள்ளூர் செய்திகள்
உத்திரமேரூர் அருகே அளவுக்கதிகமாக மது குடித்த தொழிலாளி பலி
உத்திரமேரூர் அருகே அளவுக்கதிகமாக மது குடித்த தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த பாப்ப நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 38). கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். அவர் 2 நாட்களாக தொடர்ந்து மது குடித்துக்கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. வேறு எந்த உணவும் எடுத்து கொள்ளவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் அவர் திடீரென வீட்டின் முன் பக்கமாக மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து இதுகுறித்து விசாரித்து வருகிறார்.