உள்ளூர் செய்திகள்
கைது

கண்டாச்சிபுரம் அருகே மதுபாட்டில்கள் விற்ற 2 வாலிபர்கள் கைது

Published On 2022-01-17 11:09 GMT   |   Update On 2022-01-17 11:09 GMT
கண்டாச்சிபுரம் அருகே மதுபாட்டில்கள் விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூர்:

கண்டாச்சிபுரத்தை அடுத்த காரணை பஸ் நிறுத்தம் அருகே, கண்டாச்சிபுரம் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் இருந்னர். அப்போது மதுபாட்டில் விற்ற அத்தியூர் திருக்கை கிராமத்தைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் அய்யப்பன்(வயது 31) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் ஏரிக்கரை பகுதியில் மது பாட்டில் விற்ற வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி மகன் முரளி(30) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News