உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 308 பேருக்கு கொரோனா
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 308 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் . 101 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினார் .
இதுவரை மாவட்டத்தில் 46 ஆயிரத்து 152 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர் . அவர்களில் 44 ஆயிரத்து 107 பேர் சிகிச்சையில் குணம் அடைந்தனர் .
தற்போது 1,683 பேர் சிகிச்சையில் உள்ளனர் . இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 362 ஆக உள்ளது.