உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

கல்லாவி அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-01-16 13:41 IST   |   Update On 2022-01-16 13:41:00 IST
கல்லாவி அருகே திருமணமாகி 8 மாதங்கள் ஆனநிலையில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஊத்தங்கரை: 

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே உள்ள அம்மன் கோவில்பதி கொல்ல கொட்டாய் பகுதியை சேர்ந்தவர்ஜெகன். 

இவரது மனைவி அருள்மொழி (வயது 23). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 மாதங்கள் ஆகிறது. கணவன் - மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. பிறகு ஜெகன் வழக்கம்போல வேலைக்கு சென்று விட்டார். அப்போது வீட்டில் இருந்த அருள்மொழி மனவேதனையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து கல்லாவி போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணம் ஆகி 8 மாதத்தில் இளம்பெண் இறந்துள்ளதால் இதுகுறித்து ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அலெக்சாண்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News