உள்ளூர் செய்திகள்
சங்கராபரணி ஆற்றில் மணல் கடத்திய 3 பேர் கைது
திருக்கனூர் அருகே சங்கராபரணி ஆற்றில் மாட்டு வண்டிமூலம் மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
திருக்கனூர் அருகே கொடாத்தூரில் சங்கராபரணி ஆறு உள்ளது. இந்த ஆற்றின் கரையோரத்தை சேதப்படுத்தி மாட்டு வண்டி மூலம் மணல் கடத்தப்படுவதாக திருக்கனூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார், வேலு, உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஜார்லேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்குள்ள ஆற்றில் இருந்து மணலை திருடி மாட்டு வண்டியில் கடத்தி வந்த 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் தமிழக பகுதியான வி.நெற்குணம் புதுகாலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெங்கடபதி (வயது 32), முட்றாம்பட்டு காலனியை சேர்ந்த அய்யனார் (45), கடலூர் உச்சிமேடு சாலை தெருவை சேர்ந்த தேவநாதன் (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.