உள்ளூர் செய்திகள்
மரணம்

பண்ருட்டி அருகே குடிநீர் தொட்டி ஆபரேட்டர் மர்ம மரணம்

Published On 2022-01-15 16:15 IST   |   Update On 2022-01-15 16:15:00 IST
பண்ருட்டி அருகே குடிநீர் தொட்டி ஆப்பரேட்டர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பத்திரக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 48). இவர் அதே பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் ஆப்பரேட்டர் வேலை பார்த்து வந்தார். நேற்றிரவு வழக்கம்போல் குணசேகரன் மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் அடியிலுள்ள மோட்டார் கொட்டகையில் படுத்து தூங்கினார். தொடர்ந்து காலை நீண்ட நேரமாகியும் குடிநீர் வராததால் பொதுமக்கள் அங்குள்ள மோட்டார் கோட்டையைத் திறந்து பார்த்தனர்.

அப்போது அங்கு குணசேகரன் மர்மமான முறையில் இறந்து கிடப்பது தெரியவந்தது.இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனே இது குறித்து பஞ்சாயத்து தலைவர் தெய்வானை சிங்காரவேலுவுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து நடுவீரப்பட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது.

புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் தொட்டி ஆப்பரேட்டர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News