உள்ளூர் செய்திகள்
கொரோனா வைரஸ்

கடலூர் மாவட்டத்தில் அசுர வேகத்தில் பரவும் கொரோனா

Published On 2022-01-15 16:15 IST   |   Update On 2022-01-15 16:15:00 IST
அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழுவீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு போன்றவற்றில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடலூர்:

தமிழகத்தில் உருமாறிய ஒமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு கடைபிடிக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. கொரோனா பரவல்

இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒருவருக்கும் மட்டும் கொரோனா தொற்று இருந்தது. அது கடந்த 12-ந் தேதி 206 பேருக்கும், 13-ந் தேதி 276 பேருக்கும் தொற்று ஏற்பட்டு உள்ளது.

தற்போது நேற்று 308 பேருக்கு கொரோனா தொற்று பரவல் அசுரவேகத்தில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தற்போது கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கூடுதலாக படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதுமட்டுமன்றி போலீஸ் சார்பில் ஜனவரி 1-ந் தேதி முதல் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேர் முக கவசம் அணியாமல் இருந்தமைக்காக அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கடலூர் துறைமுகத்தில் மற்றும் இறைச்சி கடைகளில் வாரந்தோறும் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் முக கவசம் அணியாமல் சமூக இடைவெளி பின்பற்றாமல் மீன்கள் மற்றும் இறைச்சிகளை போட்டி போட்டுக்கொண்டு வாங்கி செல்வதால் நாளுக்கு நாள் தொற்று பரவல் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆகையால் மாவட்ட நிர்வாகம் நாளுக்கு நாள் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழுவீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு போன்றவற்றில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News