உள்ளூர் செய்திகள்
கொரோனா வைரஸ்

திட்டக்குடியில் 3 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2022-01-15 16:14 IST   |   Update On 2022-01-15 16:14:00 IST
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் ஒரே தெருவில் வசிக்கும் 3 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அப்பகுதி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திட்டக்குடி:

திட்டக்குடி நானூற்று ஒருவர் கோவில் தெரு பகுதியில் வசிக்கும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திட்டக்குடி அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை அடுத்து திட்டக்குடி நகராட்சி சார்பில் கொரோனா நோய் தொற்று கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு அப்பாதையை அடைத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, திட்டக்குடியில் பொதுமக்கள் முக கவசம் அணியாமல் வெளியில் செல்ல வேண்டாம், சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும், அதிக கூட்டம் உள்ள இடத்திற்கு செல்ல வேண்டாம், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

Similar News