கிராம நிர்வாக அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த 5 பேர் கைது
வடலூர்:
கடலூர் அருகே குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் வைத்தியநாதன். இவர் தையல் குணாம் பட்டிணத்தில் தனக்கு சொந்தமான நிலத்தின் அருகில் ஓடை புறம்போக்கு இடத்தில் ஒரு ஏக்கர் இடத்தை ஆக்கிரமித்து பயிர் செய்துள்ளார்.
இந்த ஆக்கிரமிப்பை கடந்த 18-ந் தேதி வருவாய்த்துறையினர் அகற்றி, வடிகால் வாய்க்கால் அமைத்தனர். வைத்திய நாதன், அவரது மனைவி ஜோதி மற்றும் ஆதரவாளர்கள் வாய்க்காலை வெட்டி சேதப்படுத்தினர். இதனை தட்டிக் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் தனவேல், உதவியாளர் ஞானவேல் ஆகியோரை ஆபாசமாக திட்டி பணி செய்ய விடாமல் தடுத்தனர்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் தனவேல்குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப் -இன்ஸ்பெக்டர் பிரசன்னா வழக்குப்பதிந்து சித்தாலிக் குப்பம் சந்தானராஜ், விஜய குமார், ஆடூர் குப்பம் அறிவழகன், சிவராஜ், திருநாவுக்கரசு, ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடிய வைத்தியநாதன், ஜோதியை போலீசார் தேடிவருகின் றனர்.