உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

புதுவையில் வீட்டு உபயோக மின் கட்டணம் உயருகிறது

Published On 2022-01-13 15:05 IST   |   Update On 2022-01-13 15:05:00 IST
புதுவை மாநிலத்தில் வீட்டு உபயோக மின் கட்டணம் உயருகிறது.
புதுச்சேரி:

யூனியன் பிரதேசமான புதுவையில் ஆண்டுதோறும் இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மின் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

2022--2023-ம் ஆண்டுக்கான உத்தேச மின் கட்டணம் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி வீட்டு உபயோக மின்கட்டணம் உயர்கிறது.  இதன்படி 100 யூனிட்டுக் குள் ரூ.1.55 ஆக இருந்த கட்டணம் 35 பைசா உயர்ந்து ரூ.1.90 ஆகவும், 101ல் இருந்து 200 யூனிட் வரை ரூ.2.60 ஆக இருந்த கட்டணம் 15 பைசா உயர்ந்து ரூ.2.75 ஆகவும் உயர்கிறது. 201 யூனிட்டுக்கு மேல் வீட்டு உபயோக கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை. வர்த்தகம், விவசாய மின் கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை. 

வழக்கமாக ஜனவரி மாதத்தின் இறுதியில் ஆண்டு தோறும் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்துக்கு பின் உத்தேச கட்டணமே நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்படும்.  கடந்த சில ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. எதிர்ப்பு தெரிவித்தாலும் கட்டணம் குறைக்கப்படவில்லை. 

இந்த ஆண்டு கொரோனா காரணமாக கருத்து கேட்பு கூட்டம் காணொலி வாயிலாக நடத்த திட்டமிட்டுள்ளனர். வருகிற 28-ந்தேதி கூட்டம் காணொலி வாயிலாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கூட்டத்துக்கு பின் உத்தேச கட்டணமே நிர்ணயிக்கப்பட்ட கட்டணமாக அறிவிக்கப்பட்டு வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிகிறது.  இதனால் புதுவையில் வீட்டு உபயோக மின் கட்டணம் உயர்வது உறுதியாகி உள்ளது.

Similar News