உள்ளூர் செய்திகள்
ஆசிரியர்களுக்கு செயல் ஆராய்ச்சி பயிற்சி கூட்டம் நடைபெற்றது.

ஆசிரியர்களுக்கு செயல் ஆராய்ச்சி பயிற்சி கூட்டம்

Published On 2022-01-12 10:18 GMT   |   Update On 2022-01-12 10:18 GMT
மயிலாடுதுறை அருகே கூறைநாடு தனியார் பள்ளியில் ஆசிரியர்களுக்கு செயல் ஆராய்ச்சி பயிற்சி கூட்டம் நடைபெற்றது.
தரங்கம்பாடி:

மயிலாடுதுறை, கூறைநாடு தனியார் பள்ளியில் செயல் ஆராய்ச்சி பரவலாக்கும் பணிமனை பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. 

பயிற்சிக்கு மாவட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கல்லூரி முதல்வர் காமராசன் தலைமை தாங்கினார். 

துணை முதல்வர் பழனிச்சாமி, பேராசிரியர் ராணி முன்னிலை வகித்தனர். ஆதீஸ்வரன் வரவேற்றார்.

இதில் 21, 22-ம் ஆண்டுக்கான செயல் ஆராய்ச்சியை பரவலாக்கும் பணிமனை பயிற்சிக்கு மயிலாடுதுறை மற்றும் குத்தால ஒன்றியத்தை சேர்ந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செயல் ஆய்வுகளை சமர்ப்பித்த பட்டதாரி ஆசிரியர், ஆசிரியைகள் ஆகியோர் தங்களது ஆராய்ச்சியை கட்டுரையாக சமர்ப்பித்தனர். 

இந்த ஆய்வின் பயனை மாணவர்களிடம் சேர்க்கும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டது. 

தமிழரசி உள்ளிட்ட ஆசிரியைகள் கலந்துக் கொண்டனர். முடிவில் ஆய்வு பட்டதாரி ஆசிரியர் மனோகர் நன்றி கூறினார்.
Tags:    

Similar News