உள்ளூர் செய்திகள்
பாணாவரம் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை தொடர்ந்து போலீஸ் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மற்றும் பாணா வரம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் கோவிந்தசாமி கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்தார்.
இந்நிலையில் கொரோனா டெஸ்ட் எடுத்து பார்த்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து போலீஸ் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
அவருடன் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.