உள்ளூர் செய்திகள்
ஜெயங்கொண்டத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தபோது எடுத்தபடம்.

முழு ஊரடங்கில் சுற்றியவர்களுக்கு அபராதம்

Published On 2022-01-10 15:06 IST   |   Update On 2022-01-10 15:06:00 IST
ஜெயங்கொண்டம் பகுதியில் முழு ஊரடங்கில் தேவையின்றி வெளியில் சுற்றியவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
அரியலூர்:

கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக தமிழக அரசு அறிவிப்பின்படி நேற்று அரியலூர் மாவட்டத்தில் முழுஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதி முழுவதும் உள்ள காய்கறி கடைகள், மளிகை கடைகள், இறைச்சி கடைகள், வணிக வளாகங்கள், ஜவுளிகடைகள், நகைகடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

வீதிகளில் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கலைகதிரவன் தலைமையில் போலீசார் ஆங்காங்கே சோதனைச்சாவடிகளை அமைத்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர்.

மேலும் வாகனங்களில் வருபவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் வந்த வாகன ஓட்டிகளை மறித்து அத்தியாவசிய தேவையின்றி அனாவசியமாக சுற்றியவர்களிடம் 50&க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

நகர் முழுவதும் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷகிராபானு, போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள், பாலகிருஷ்ணன், சுபா, இளங்கோவன், கல்யாணராமன் உள்ளிட்ட போலீசார் வாகன தணிக்கை மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு தேவையின்றி வந்தவர்களுக்கு அபராதம் விதித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Similar News