உள்ளூர் செய்திகள்
ஊரடங்கை மீறி திறந்த 9 கடைகளுக்கு அபராதம்
சீர்காழியில் ஊரடங்கை மீறி திறந்த 9 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சீர்காழி:
சீர்காழியில் முழுமுடக்கம் கடைபிடிக்கப்பட்ட நிலையில் நகராட்சி ஆணையர் பட்டுசாமி தலைமையில் குழுவினர் நகரில் கடைகள் திறக்கப்பட்டுள்ளதா என பொதுமுடக்க விதிமீறல்கள் குறித்து ஆய்வு செய்தனர்.
அப்போது மட்டன்கடை, மீன்கடை, பிளாஸ்டிக்கடை திறந்து வியாபாரம்
செய்த 9 வணிக நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.4900 அபராதம் விதித்தனர். மேலும் முககவசம் அணியாதவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.