உள்ளூர் செய்திகள்
தைப்பூச விழா கொடியேற்றம்.

திருவிடைமருதூர் மகாலிங்க சாமி கோவிலில் தைப்பூச விழா தொடக்கம்

Published On 2022-01-10 14:39 IST   |   Update On 2022-01-10 14:39:00 IST
திருவிடைமருதூர் மகாலிங்க சாமி கோவிலில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சுவாமிமலை:

கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமானது. 

இந்த கோவிலில் தைப்பூச பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். 
இந்த ஆண்டு தைப்பூச பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து 2-ம் நாள் சூரிய பிரபை, சந்திர பிரபை வாகனத்திலும், 3-ம் நாள் பூதம், பூதகி வாகனங்களிலும், 4-ம் நாள் யானை, சிம்ம வாகனத்திலும், 5-ம் நாள் சகோபுரம் வெள்ளி ரிஷப வாகனத்திலும் சுவாமி காட்சியளிக்கிறார்.

தொடர்ந்து 6-ம் நாள் காமதேனு, கற்பக விருட்சம் வாகனங்களிலும், 
7-ம் நாள் கயிலாய வாகனம், அன்னபட்சி வாகனத் திலும், 8-ம் நாள் காலை பல்லக்கிலும், இரவு குதிரை, கிளி வாகனங்களில் மகாலிங்க 
சுவாமி காட்சியளிக்கிறார்.

9-ம் நாள் தேரோட்டம் நடைபெறுகிறது. 10-ம் நாள் திருவிழாவாக தைப்பூச தீர்த்தவாரி பஞ்ச மூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனத்தில் காவிரி ஆற்றில் எழுந்தருளி தைப்பூசத் திருவிழா நடைபெறுகிறது. 

அன்று இரவு வெள்ளி ரதக் காட்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை
கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

Similar News