உள்ளூர் செய்திகள்
கடலூர் அருகே வாரச்சந்தையில் ரூ. 50 லட்சம் கருவாடு விற்பனை
இந்த வாரம் முழுவதும் பண்டிகை காலம் இருப்பதால் வழக்கத்தை விட வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் தங்களுக்கு தேவையான கருவாடுகள் அதிக அளவில் வாங்கி சென்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே காரா மணிக்குப்பத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை வார சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு கடலூர், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், நடுவீரப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறி, பழ வியாபாரிகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு தேவையான பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
வருகிற 14-ந்தேதி பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ளதால் பொங்கல் பானை, கரும்பு, பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
மேலும் நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, சென்னை காசிமேடு, கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கருவாடு வாரச்சந்தைக்கு வியாபாரிகள் கொண்டு வந்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து இன்று அதிகாலை 5 மணியுடன் முடிவடைந்தது.
இதனைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற வாரச்சந்தையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் காலை முதல் ஏராளமானோர் திரண்டனர். பின்னர் வருகிற வெள்ளிக்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் தங்களுக்கு தேவையான பானைகள், கரும்பு, காய்கறி வகைகள், மாட்டு பொங்கலன்று மாடுகளுக்கு தேவையான மணிகள், புதிய கயிர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களையும் வாங்கி சென்றனர்.
இந்த வாரம் முழுவதும் பண்டிகை காலம் இருப்பதால் வழக்கத்தை விட வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் தங்களுக்கு தேவையான கருவாடுகள் அதிக அளவில் வாங்கி சென்றனர். இதன் மூலம் சுமார் 50 லட்ச ரூபாய்க்கு மேல் கருவாடுகள் விற்பனையாகி உள்ளன என வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் இன்று அதிக அளவில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சமூக இடைவெளி இல்லாமல் பலபேர் முக கவசம் அணியாமல் வந்ததால் சந்தை முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் போலீசார் சார்பில் பொது மக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
கடலூர் அருகே காரா மணிக்குப்பத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை வார சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு கடலூர், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், நடுவீரப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறி, பழ வியாபாரிகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு தேவையான பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
வருகிற 14-ந்தேதி பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ளதால் பொங்கல் பானை, கரும்பு, பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
மேலும் நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, சென்னை காசிமேடு, கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கருவாடு வாரச்சந்தைக்கு வியாபாரிகள் கொண்டு வந்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து இன்று அதிகாலை 5 மணியுடன் முடிவடைந்தது.
இதனைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற வாரச்சந்தையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் காலை முதல் ஏராளமானோர் திரண்டனர். பின்னர் வருகிற வெள்ளிக்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் தங்களுக்கு தேவையான பானைகள், கரும்பு, காய்கறி வகைகள், மாட்டு பொங்கலன்று மாடுகளுக்கு தேவையான மணிகள், புதிய கயிர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களையும் வாங்கி சென்றனர்.
இந்த வாரம் முழுவதும் பண்டிகை காலம் இருப்பதால் வழக்கத்தை விட வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் தங்களுக்கு தேவையான கருவாடுகள் அதிக அளவில் வாங்கி சென்றனர். இதன் மூலம் சுமார் 50 லட்ச ரூபாய்க்கு மேல் கருவாடுகள் விற்பனையாகி உள்ளன என வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் இன்று அதிக அளவில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சமூக இடைவெளி இல்லாமல் பலபேர் முக கவசம் அணியாமல் வந்ததால் சந்தை முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் போலீசார் சார்பில் பொது மக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.