உள்ளூர் செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுவை மாநிலத்தில் கொரோனா பரிசோதனையில் 31 சதவீதத்தினருக்கு தொற்று

Published On 2022-01-10 12:36 IST   |   Update On 2022-01-10 12:36:00 IST
புதுவையில் கொரோனா தொற்று நாள்தோறும் வேகமாக அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி:

புதுவை மாநிலத்தில் நேற்று ஆயிரத்து 570 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் புதிதாக 489 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 438, காரைக்காலில் 49, ஏனாமில் 1, மாகியில் ஒருவர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுவையில் 85, காரைக்காலில் 16, மாகியில்11 பேர் என 112 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 11, காரைக்காலில் 6 பேர் என 17 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.

புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 211 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 607 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

புதுவையில் ஆயிரத்து 300, காரைக்காலில் 158, ஏனாமில் 4, மாகியில் 48 பேர் என ஆயிரத்து 610 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

புதுவை மாநிலத்தில் இப்போது ஆயிரத்து 722 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 882 ஆக உள்ளது.

புதுவையில் 2-வது தவணை உட்பட 14 லட்சத்து 65 ஆயிரத்து 767 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பரிசோதனை நடத்தியதில் 31 சதவீதத்தினருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கும்போது தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை கூடும் அபாயம் உள்ளது. புதுவையில் கொரோனா தொற்று நாள்தோறும் வேகமாக அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News