உள்ளூர் செய்திகள்
மாடுகள் பிடிக்கப்பட்டு கட்டி வைக்கப்பட்டு உள்ளது.

சாலையில் திரிந்த மாடுகள் பிடிப்பு

Published On 2022-01-09 09:50 GMT   |   Update On 2022-01-09 09:50 GMT
சீர்காழியில் சாலையில் திரிந்த 25 மாடுகள் பிடித்து அடைக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் பிரதான போக்குவரத்து சாலைகளில் கால்நடைகள் தினந்தோறும் சுற்றி திரிகின்றது.
 
இதனால் சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்கள் முதல் நான்கு சக்கர வாகனங்கள் வரை விபத்துக்குள்ளாகி வருகின்றது. 

தொடர் விபத்துகளால் வாகனங் களில் செல்பவர்கள், 
உயிரிழப்பு மற்றும் கால்நடைகள் உயிரிழப்பும் ஏற்பட்டு வந்தது.

இதனையடுத்து சீர்காழி நகராட்சி ஆணையர் கால்நடைகளை 
முறையாக பராமரிக்காமல் சாலைகளில் சுற்றிதிரியவிடும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் 
மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் 
என்றும் அறிவித்திருந்தார்.

அதன்படி சீர்காழி நகர் பகுதியில் பிரதான சாலைகளில் சுற்றித் திரிந்த 
25-க்கும் மேற்பட்ட மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்து நகராட்சி வளாகத்தின் ஒரு பகுதியில் அடைத்தனர். 

மாடுகளை தேடி வந்த உரிமையாளாகளிடம் ஒவ்வொரு 
மாடுகளுக்கும் தலா ரூ.1000-ம், கன்றுகளுக்கு தலா ரூ.500-ம் 
அபராதம் விதித்து ஆணையர் பட்டுசாமி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News