உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் சிகிச்சைக்கு ஜிப்மரில் புதிய ஏற்பாடு

Published On 2022-01-09 14:31 IST   |   Update On 2022-01-09 14:31:00 IST
70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் புற நோயாளிகள் சிகிச்சை மையத்தில் மருத்துவ பதி வேடு பதியப்பட்டு, பொது மருத்துவ சிகிச்சை பிரிவுக்கு செல்ல வேண்டும். 

தற்போது கொரோனா  தொற்று பரவல் உள்ள  சூழ்நிலையில், நுழைவு வாயில் அருகே புற  நோயாளிகள் சிகிச்சை மையத்தில், 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய முதியவர்களுக்கு சிகிச்சை பெற தனி பிரிவு தொடங்கப்பட்டது.

இந்த நிலையில், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் ஜிப்மர் நுழைவு வாயில் அருகே உள்ள  புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்க  முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் செவ்வாய்கிழமை முதல்  அமலுக்கு வருகிறது.

இது தொடர்பாக அனைத்து துறைகளுக்கும் மருத்துவமனை கண்காணிப்பாளர் சுற்ற றிக்கை அனுப்பியுள்ளார்.

Similar News