உள்ளூர் செய்திகள்
ராணிப்பேட்டை முத்துக்கடை 4 வழிச்சாலையில் வாகனங்கள் இன்றி சாலைகள் வெறிச்சோடிய காட்சி.

முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடியது

Published On 2022-01-09 13:52 IST   |   Update On 2022-01-09 13:52:00 IST
ராணிப்பேட்டை மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக சாலைகள் வெறிச்சோடியது.
ராணிப்பேட்டை:

தமிழகத்தில் முழு ஊரடங்கு இன்று அமல்படுத்தப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் முழு ஊரடங்கால் ராணிப்பேட்டை, ஆற்காடு, அரக்கோணம், சோளிங்கர், காவேரிப்பாக்கம், பனப்பாக்கம், பாணாவரம் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. சாலைகளில் வாகனங்கள் இயக்கப்படவில்லை. 

இதனால் ரோடுகள் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. போலீசார் முக்கிய பகுதிகளில் தடுப்புகள் அமைத்து கண்காணித்தனர். வெளியில் சுற்றி திரிந்தவர்களை எச்சரித்து அனுப்பினர்.

ராணிப்பேட்டை முத்துக்கடை பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. ஆந்திராவில் இருந்து சென்ற வாகனங்கள் தடுப்புகள் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டன.
அத்தியாவசியமான வாகனங்களை மட்டும் போலீசார் அனுமதித்தனர். 

காவேரிப்பாக்கம் ஓச்சேரி பகுதியில் வாகனங்கள் இயக்கப்படாததால் சென்னை& பெங்களூர் 6 வழிச்சாலை வெறிச்சோடி கிடந்தது.

Similar News