உள்ளூர் செய்திகள்
தடுப்பூசி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5,898 முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி - கலெக்டர் ஆர்த்தி தகவல்

Published On 2022-01-09 13:41 IST   |   Update On 2022-01-09 13:41:00 IST
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5,898 முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூச போடப்பட உள்ளது என கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம்:

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போட அரசு முடிவு செய்து உள்ளது. முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு நாளை (10-ந் தேதி) முதல் செலுத்தப்பட இருக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5,898 முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூச போடப்பட உள்ளது. இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

நாளை (திங்கட்கிழமை) முதல் மேலும் ஒரு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி முன்கள மற்றும் சுகாதார பணியாளர்கள் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முன்கள சுகாதார பணியாளர்கள் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் என மொத்தம் 5898 பேர் உள்ளனர்.

2-ம் தவணை தடுப்பூசி (கோவாக்சின் அல்லது கோவிட்ஷீல்டு) செலுத்திய மேற்கண்ட பயனாளிகள் 39 நாட்களுக்கு பிறகு இந்த முன்னெச்சரிக்கை தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம். எனவே நாளை நடைபெறும் முன்கள சுகாதார பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கான முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி பரிந்துரைக்கப்பட பயனாளிகசெலுத்தி கொண்டு கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோயிலிருந்து தங்களை தற்காத்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Similar News