உள்ளூர் செய்திகள்
வடமாநில தொழிலாளி தவறி விழுந்து பலி
அரியலூரில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணியில் இருந்த வடமாநில தொழிலாளி தவறி விழுந்து இறந்தார்.
அரியலூர்:
அரியலூர் ராஜாஜி நகர் பகுதியில், அரசு கலைக்கல்லூரி அருகில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளில் வெளி மாநிலத்தைச் சார்ந்தவர்கள் சுமார் 500&க்கும் மேலான நபர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கட்டிடத்தின் ஆறாவது மாடியில் வேலை செய்து கொண்டிருந்தபோது மேற்கு வங்காள மாநிலம் பட்டுகானா புதூரை சேர்ந்த மிந்து மண்டல் (வயது 22) என்பவர் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். தகவலறிந்த அரியலூர் போலீசார் விரைந்து சென்று, மிந்து மண்டல் உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோத னைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து பல தொழிலாளர்களிடம் அரியலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வெளிமாநில தொழிலாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தொழிலாளி மரணம் குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் ராஜாஜி நகர் பகுதியில், அரசு கலைக்கல்லூரி அருகில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளில் வெளி மாநிலத்தைச் சார்ந்தவர்கள் சுமார் 500&க்கும் மேலான நபர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கட்டிடத்தின் ஆறாவது மாடியில் வேலை செய்து கொண்டிருந்தபோது மேற்கு வங்காள மாநிலம் பட்டுகானா புதூரை சேர்ந்த மிந்து மண்டல் (வயது 22) என்பவர் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். தகவலறிந்த அரியலூர் போலீசார் விரைந்து சென்று, மிந்து மண்டல் உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோத னைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து பல தொழிலாளர்களிடம் அரியலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வெளிமாநில தொழிலாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தொழிலாளி மரணம் குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.