உள்ளூர் செய்திகள்
சாமி தரிசனம் செய்த தருமபுரம் ஆதீனம்.

தியாகராஜர் கோவிலில் தருமபுரம் ஆதீனம் சாமி தரிசனம்

Published On 2022-01-08 15:02 IST   |   Update On 2022-01-08 15:02:00 IST
ஆச்சாள்புரத்தில் உள்ள சிவலோக தியாகராஜர் கோவிலில் தருமபுரம் ஆதீனம் சாமி தரிசனம் செய்தார்.
சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட திருவெண்ணிற்றுயம்மை உடனாகிய சிவலோக தியாகராஜர் கோவில் உள்ளது. 

இக்கோவிலில் தனி சன்னதியில் திருமணக் கோலத்தில் திருஞான சம்பந்தர் பெருமான் தோத்திர பூர்ணாம்பிகையுடன் அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தனுர்மாத வழிபாட்டிற்காக வந்தார். 

தொடர்ந்து மூலவர் சிவலோக தியாகராஜர் சுவாமி, திருவெண்ணிற்றுயம்மை, ரிணவிமோசனர், திருஞானசம்பந்தர் பெருமான் ஆகிய சன்னதிகளில் தரிசனம் செய்தார்.

கோசாலையில் பசு மாடுகளுக்கு பழங்கள் அளித்து வழிபாடு செய்தார். முன்னதாக கோவில் கட்டளைமடத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு உள்ளூர் பக்தர்கள், பொதுமக்கள் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. 

Similar News