உள்ளூர் செய்திகள்
மின்கம்பியின் மீது தூக்கி வீசப்பட்ட மூதாட்டி அம்சவள்ளி.

மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி

Published On 2022-01-08 12:38 IST   |   Update On 2022-01-08 17:27:00 IST
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் த £க்கி மூதாட்டி பலியான சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கரடிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மனைவி அம்சவள்ளி (வயது 70).  இவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு சமையலராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது கணவர் கலியபெருமாள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். 

கணவர் உயிருடன் இருக்கும்போது தொடங்கிய வீடுகட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் மாடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுவற்றிற்கு அம்சவள்ளி தண்ணீர் தெளித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மேலே சென்ற மின்கம்பி உரசியதில், மின்கம்பியின் மீது தூக்கி வீசப்பட்ட அம்சவள்ளி, பரிதாபமாக உயிரிழந்தார். 

இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில், விரைந்து வந்த ஜெயங்கொண்டம் போலீசார்,  அம்சவள்ளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News