உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

வில்லியனூர்: சூப் கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது

Published On 2022-01-08 09:41 IST   |   Update On 2022-01-08 09:41:00 IST
சூப் குடித்துவிட்டு பணம் தராமல் வியாபாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:

புதுவை வில்லியனூரை அடுத்த மங்கலம்-உறுவையாறு புதுபாலத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் சூப் கடை நடத்தி வருகிறார். 

சம்பவத்தன்று சூப் கடையில் ஒருவர் தகராறு செய்வதாகவும்,  பொதுமக்களை பார்த்து தகாத   வார்த்தைகளால் திட்டுவதாக மங்கலம்  போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது. 

சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தவரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் அவர் கடலூர் மாவட்டம்  புதுக்கடை- மடுகரை சாலையை சேர்ந்த தேவநாதன் மகன் பார்த்தசாரதி என்பது தெரியவந்தது. 

ரவுடியான பார்த்தசாரதி மீது ஏற்கனவே  ரெட்டிச்சாவடி  போலீஸ் நிலையத்தில் கொலை, 2 அடி-தடி வழக்கு உள்ளது தெரியவந்தது. 

இதையடுத்து பார்த்தசாரதியை போலீசார் கைது செய்தனர். போலீசார் விசாரணைக்கு பின் சிறையில் அடைக்க உள்ளனர்.

Similar News