உள்ளூர் செய்திகள்
போட்டித்தேர்வுகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு அனுமதி
அரியலூர் மாவட்டத்தில் போட்டித்தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு அனுமதி கடிதம் வழங்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் உத்தரவுப்படி பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நடைமுறையில் உள்ள கோவிட்- கட்டுப்பாடுகளை அரசு ஆணையின்படி 10.01.2022 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது.
ஊரடங்கு நாளன்று போட்டித்தேர்வுகளுக்குச் செல்பவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.-
கொரோனா பரவலை தடுப்பதற்காக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஞாயிற்றுக் கிழமையில் ஒன்றிய மற்றும் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் தேர்வுகள்,
மற்ற போட்டித் தேர்வுகள் நிறுவனங்களில் நடைபெறும் வேலை வாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகள் ஆகியவற்றில் பங்கேற்க செல்லும் இளைஞர்கள் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு அல்லது நிறுவனங்களின் அழைப்பு கடிதம் ஆகியற்றை காண்பித்து தங்களது பயணங்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.
மேலும், இது போன்ற முழு ஊரடங்கு நாட்களில் நடைபெறும் போட்டித்தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளுக்கு செல்லும்போது அவர்களுக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.