உள்ளூர் செய்திகள்
கைது

நடுரோட்டில் லாரி டிரைவரை வெட்டி கொல்ல முயற்சி- வாலிபர் கைது

Published On 2022-01-07 10:37 GMT   |   Update On 2022-01-07 10:37 GMT
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே நடுரோட்டில் லாரி டிரைவரை வெட்டி கொல்ல முயன்றது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்:

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே எழுமேடு அகரம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 30). லாரி டிரைவர். நேற்று மாலை மேல்பட்டாம்பாக்கம் களிஞ்சிகுப்பம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது 2 நபர்கள் திடீரென்று வடிவேலை வழிமறித்து தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக நடுரோட்டில் வைத்து வெட்டி தப்பி ஓடினார்கள்.

அப்போது அவ்வழியாக வந்த பொதுமக்கள் உடனடியாக ரத்தவெள்ளத்தில் கிடந்த வடிவேலை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேல்சிகிச்சைக்காக வடிவேலை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News