உள்ளூர் செய்திகள்
கடத்தல்

பரங்கிப்பேட்டையில் 11-ம் வகுப்பு மாணவி கடத்தல்

Published On 2022-01-07 15:50 IST   |   Update On 2022-01-07 15:50:00 IST
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் 11-ம் வகுப்பு மாணவி கடத்தப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரங்கிப்பேட்டை:

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர். அவரது மகள் இறைமொழி (வயது 17). இவர் பரங்கிப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகின்றார்.

கடந்த 6-ந் தேதி வீட்டில் இருந்த இறைமொழியை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த சந்திரசேகர் தனது மகளை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் இறைமொழி கிடைக்கவில்லை.

இதுகுறித்து சந்திரசேகர் பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். புகார் மனுவில் தனது மகள் இறைமொழியை அதே ஊரை சேர்ந்த மனோகர் மகன் பிரசன்னா (28) என்பவர் கடத்தி சென்று இருக்கலாம் என கூறி உள்ளார்.

அதன்பேரில் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி வழக்குப்பதிவு செய்து காணாமல் போன இறை மொழி, பிரசன்னா ஆகியோரை தேடி வருகிறார்கள்.

பரங்கிப்பேட்டை அருகே உள்ள புதுப்பேட்டை சண்முகா நகரை சேர்ந்தவர் ரமேஷ். அவரது மகள் சத்யா (வயது 14).

கடந்த 26-ந் தேதி வீட்டில் இருந்த சத்தியாவை காணவில்லை. அவரின் பெற்றோர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து பெண்ணின் தந்தை ரமேஷ் பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அந்தப் புகாரில் என் மகளை அதே ஊரை சேர்ந்த பிரபு (17) என்பவர் கடத்திச் சென்றிருக்கலாம் என்று சந்தேகத்தின் பேரில் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவிவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் காணாமல் போன சத்தியா, பிரபு ஆகியோரை தேடி வருகிறார்கள்.

Similar News