உள்ளூர் செய்திகள்
ஜோதி

நகராட்சி முன்னாள் பெண் ஊழியர் மர்ம சாவு

Published On 2022-01-07 15:24 IST   |   Update On 2022-01-07 15:24:00 IST
அரக்கோணம் நகராட்சி முன்னாள் பெண் ஊழியர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார்.
அரக்கோணம்:

அரக்கோணம் காந்தி நகரை சேர்ந்த ஜெய்சங்கர் மனைவி ஜோதி (வயது 48) இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

அரக்கோணம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள பயன்பாடற்ற கிணற்றில் இன்று காலை ஜோதி பிணமாக மிதந்தார்.

இதனைகண்ட பணியாளர்கள் நகராட்சி அலுவலர்களுக்கு தெரிவித்தனர். உடனே தீயணைப்புத் துறை மற்றும் போலீசாரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றிலிருந்து சடலத்தை  மீட்டனர். 

 போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஜோதி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தற்காலிக பணியாளராக வேலை செய்துவந்ததார். உடல்நிலை பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப் பட்டதால் பணியிலிருந்து நின்று விட்டார்.

இந்நிலையில் கொரோனோ ஊராடங்கால் கடந்த சில மாதங்களாக போதிய வருமானம் இன்றி தவித்து வந்தார். நகராட்சியில் அலுவலர்களிடம் மீண்டும் வேலை கேட்டு வந்தார்.

 இந்நிலையில் ஜோதி பிணமாக மீட்கப்பட்டுள்ளார். உடல்நிலை பாதிப்பு காரணமாக தற்கொலை செய்தாராஅல்லது வேறு ஏதேனும் காரணமா என்று அரக்கோணம் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News