உள்ளூர் செய்திகள்
50 சதவீத இருக்கைகளுடன் இயங்கும் உணவகங்கள்
புதுவையில் 50 சதவீத இருக்கைகளுடன் உணவகங்கள் இயங்கின.
புதுச்சேரி:
கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் புதுவையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பெரிய வணிக நிறுவனங்களில் காற்றோட்ட வசதியுடன் 50 சதவீத நபர்களுடன் அனுமதிக்கப்படுகிறது. வெளிமாநில பஸ்களில் 50 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
ஒட்டல்கள், உணவகங்கள், ஆடிட்டோரியம், பியூட்டி பார்லர், சலூன், ஸ்பா, உடற்பயிற்சி கூடம், யோக பயிற்சி கூடம், சினிமா தியேட்டர் ஆகியவற்றிலும் 50 சதவீத நபர்கள் அனு மதிக்கப்படுகிறார்கள்.
உணவகங்களில் கொரோனா தடுப்பு வழி முறைகளை பின்பற்றி வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்கின்றனர். உணவகங்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே போடப்பட்டுள்ளன. 4 பேர் அமர்ந்து உணவு அருந்தும் மேஜைகளில் 2 இருக்கைகள் மட்டுமே போடப்பட்டு வாடிக்கையாளர்ளுக்கு உணவு பரிமாறப்படுகிறது.
இந்த நடவடிக்கை மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.