உள்ளூர் செய்திகள்
ஓ.என்.ஜி.சி. லாரியை மறித்து போராட்டம்.

ஓ.என்.ஜி.சி. லாரியை மறித்து பொதுமக்கள் போராட்டம்

Published On 2022-01-06 16:28 IST   |   Update On 2022-01-06 16:28:00 IST
குத்தாலம் அருகே ஓ.என்.ஜி.சி. லாரியை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள திருவேள்விக்குடி கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. பழைய எண்ணெய் கிணறு உள்ளது. 

இங்கு குத்தாலம் எரிவாயு சேமிப்பு மையத்தில் இருந்து கடந்த 10 நாட்களாக தளவாட பொருட்களை லாரியில் ஏற்றி வந்து 15&க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆழ்துளை போடும் கருவிகள் மூலம் பணிகள் நடந்து வருவதாகவும், 
இதனால் புதிதாக ஒரு எண்ணெய் கிணறு அமைக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனம் முயற்சிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து திருவேள்விக்குடி மெயின்சாலையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் 
ஜெயராமன் தலைமையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
 
அப்போது குத்தாலம் எரிவாயு சேமிப்பு மையத்தில் இருந்து தளவாட பொருட்கள் ஏற்றி வந்த லாரியை மறித்து போராட்டம் நடத்தினர்.
 
தகவல் அறிந்த குத்தாலம் போலீசார் மற்றும் ஓ.என்.ஜி.சி. பாதுகாப்பு ஆய்வாளர் பத்மநாபன் ஆகியோர் பொதுமக்களிடம் சமரச 
பேச்சுவார்த்தை நடத்தினர்.
 
இதன் பின்னர் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News