உள்ளூர் செய்திகள்
பொது இடத்தில் மது அருந்திய இருவர் கைது
பெண்ணாடத்தில் பொது இடத்தில் மது அருந்திய இருவரை கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திட்டக்குடி:
பெண்ணாடம் சுற்றுப்பகுதியில் சாலையோரம் பல்வேறு இடங்களில் அமர்ந்து மது பிரியர்கள் மது அருந்துவதாக கிடைத்த தகவலின் பேரில் பெண்ணாடம் போலீசார் ராம்கோ சிமெண்ட் அருகே நேற்று ரோந்து பணி மேற்கொண்டு இருந்தனர்.
அப்போது சிலுப்பனூர் சாலையில் கிளிமங்கலத்தைச் சேர்ந்த காளிதாஸ் (22) டி.புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பிச்சமுத்து (20) ஆகிய இருவரும் பொது இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுப்ரமணியன் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண்ணாடம் சுற்றுப்பகுதியில் சாலையோரம் பல்வேறு இடங்களில் அமர்ந்து மது பிரியர்கள் மது அருந்துவதாக கிடைத்த தகவலின் பேரில் பெண்ணாடம் போலீசார் ராம்கோ சிமெண்ட் அருகே நேற்று ரோந்து பணி மேற்கொண்டு இருந்தனர்.
அப்போது சிலுப்பனூர் சாலையில் கிளிமங்கலத்தைச் சேர்ந்த காளிதாஸ் (22) டி.புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பிச்சமுத்து (20) ஆகிய இருவரும் பொது இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுப்ரமணியன் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.