உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு

Published On 2022-01-06 09:56 GMT   |   Update On 2022-01-06 09:56 GMT
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிர் இழந்தார்.
சீர்காழி:

மணல்மேடு அருகே நமச்சிவாயபுரம் வீரன்கோவில் தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 39). கூலி தொழிலாளியான இவர் சம்பவத்தன்று அருகில் உள்ள கல்யாணசோழபுரம் பகுதியில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார்.

நமச்சிவாயபுரம் கிராம நிர்வாக அலுவலகம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அவர் சறுக்கி சாலையில் விழுந்தார்.

இதில் பலத்த காயமடைந்த அவரை சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

அங்கு சிகிச்சை பலனின்றி தியாகராஜன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
Tags:    

Similar News