உள்ளூர் செய்திகள்
பொங்கல் பரிசு தொகுப்பை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கிய காட்சி.

3.37 லட்சம் ரேசன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு

Published On 2022-01-05 16:11 IST   |   Update On 2022-01-05 16:11:00 IST
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரேசன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.
ராணிப்பேட்டை:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரேசன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நவல்பூரில் நடந்தது. 

கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கினார். அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 லட்சத்து 37 ஆயிரத்து 597 ரேசன் கார்டுதாரர்களுக்கும், 380 இலங்கை தமிழர் மறுவாழ்வு குடும்பங்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் என மொத்தம் 3  லட்சத்து 37 ஆயிரத்து 977 குடும்ப  அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு  தொகுப்பு வழங்கப்பட  உள்ளது என்றார்.

நிகழ்ச்சியில் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திருகுணஐயப்பதுரை, மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை, ஒன்றிய குழு தலைவர் சேஷா வெங்கட், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செல்வம், நகர பொறுப்பாளர் பூங்காவனம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத், நகர துணை செயலாளர் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News